search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு அருங்காட்சியகம்"

    • மாணவ-மாணவிகள் பங்கேற்பு
    • கருணாநிதியின் உருவப்படத்தை ஓவியமாக வரையும் வண்ணம் தீட்டுதல் நிகழ்வு நடத்தப்பட்டது.

    கன்னியாகுமரி :

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் ஏராளமான நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அவற்றுள் ஒன்றாக பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்ட கருணாநிதியின் உருவப்படத்தை ஓவியமாக வரையும் வண்ணம் தீட்டுதல் நிகழ்வு நடத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியை கன்னியாகுமரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்திய வள்ளி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கன்னியாகுமரி அரசு தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு கருணாநிதியின் உருவப்படத்துக்கு வண்ணங்கள் தீட்டினர்.

    சிறப்பாக வண்ணம் தீட்டிய 5 மாணவர்களுக்கு பரிசுகளும், கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. ஓவியர் கோபாலகிருஷ்ணன் மற்றும் கன்னியாகுமரி அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆசீர்பாய் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    இதில் கன்னியாகுமரி அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சகாய ஜோஸ்பின், மாதா, ராணி ப்ரியா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • சீரமைக்க அறங்காவலர் குழு தலைவர் நடவடிக்கை
    • 4 ஆயிரத்து 224 சதுரஅடி பரப்பளவில் இந்த அரசு அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மெயின்ரோட்டில் காந்தி மண்டபம் அருகில் தமிழ்நாடு அரசு அருங்காட்சியகத்துறைக்கு சொந்தமான அரசு அருங்காட்சியகம் உள்ளது. இந்த அருங்காட்சியகம் கடந்த 1991-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ந்தேதி திறக்கப்பட்டது. மொத்தம் 4 ஆயிரத்து 224 சதுரஅடி பரப்பளவில் இந்த அரசு அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. அரசு அருங்காட்சியகத்துக்கு சொந்த கட்டிடம் இல்லாததால் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இந்து அறநிலையத்துறை இடத்தில் இயங்கி வருகிறது.

    இந்த இடத்துக்கு மாதம்தோறும் அருங்காட்சியகத்துறை பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்துக்கு ரூ.9ஆயிரத்து 795 வாடகை செலுத்தி வருகிறது. இந்த அரசு அருங்காட்சியகத்தில் கடலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பழங்கால கல் சிலைகள், திமிங்கலத்தின் எலும்புக் கூடு, டால்பின் மீன் மற்றும் அதன் எலும்புக்கூடு, காடுகளில் வன மிருகங்கள் வசிக்கும் காட்சி, கடல் ஆமை, பழங்கால உலோகப்பொருட்கள், தோல்பாவை கூத்தில் பயன்படுத்தப்படும் தோல் பொம்மைகள், குமரி மாவட்டத்தில் முக்கியமாக பயிரிடப்படும் ரப்பர் தோட்டம், சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமி கோவிலில் பயன்படுத்தப்பட்டு வந்த பழங்கால தேர் மற்றும் கருட வாகனம் போன்றவை காட்சியகப்ப டுத்தப்பட்டுள்ளது. அது மட்டும் இன்றி இந்த அருங்காட்சியகத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் மறைந்த தலைவர்களின் புகைப்பட கண்காட்சியும் இடம் பெற்றுள்ளது.

    இந்த அரசு அருங்காட்சியகம் சமீபத்தில் பெய்த கன மழையினால் தண்ணீர் ஒழுகி அங்கு காட்சிக்காக வைக்கப்பட்டு இருந்த அரிய பொருட்கள் நாசமடைந்து உள்ளன. இதைத்தொடர்ந்து மழையில் ஒழுகும் அரசு அருங்காட்சியகத்தை சீரமைக்க வேண்டும் என்று அருங்காட்சியத்துறை அதிகாரிகள் அறநிலைத்துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தனர். அதன் பயனாக குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், அறங்காவலர் குழு உறுப்பினர் துளசிதரன் நாயர், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த், பொறியாளர் ராஜ்குமார், உதவி கோட்ட பொறியாளர் மோகன்தாஸ் மற்றும் அதிகாரிகள் கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தை நேரில் சென்றுபார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மழையில் ஒழுகும் அரசு அருங்காட்சியக கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் உறுதி அளித்தார்.

    • சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்
    • காந்தியடிகளின் எண்ணங்கள் மற்றும் கொள்கைகளை இளைய தலைமுறையினரிடையே தெரிவதற்கு இந்த கண்காட்சி

    கன்னியாகுமரி :

    மகாத்மா காந்தியடிகளின் 154-வது பிறந்த நாள் விழாவையொட்டி கன்னியா குமரி அரசு அருங்காட்சியகத்தில் "காந்தி ஒரு சகாப்தம்" என்ற தலைப்பில் காந்தியடிகளின் இளமைக்காலம் முதல் இறப்பு வரை சித்தரிக்கும் புகைப்பட தொகுப்பு பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    இதனை மாணவர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.

    இந்த கண்காட்சியை கன்னியாகுமரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்திய வள்ளி திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    அகிம்சை வழியில் நாட்டு விடுதலைக்காகவும், நாட்டு மக்களின் நலனுக்காகவும் உழைத்தவர் மகாத்மா காந்தி. அவரின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், காந்தியடிகளின் எண்ணங்கள் மற்றும் கொள்கைகளை வரும் இளைய தலைமுறையினரிடையே எடுத்து செல்லும் நோக்கில் இந்த கண்காட்சி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    கண்காட்சியில் காந்தியடி கள் பங்கேற்ற, உப்பு சத்தியா கிரகம், தண்டி யாத்திரை போன்ற அகிம்சை போராட்டங்கள், முக்கிய வரலாற்று நிகழ்வுகள், காந்தியின் இளமை கால புகைப்படங்கள் மற்றும் அவரின் குடும்பத்தினர் புகைப்படங்கள் என்று பல்வேறு புகைப்படங்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்ப ட்டுள்ளன. இந்த கண்காட்சி இந்த மாதம் முழுவதும் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு இருக்கும். மேலும் காந்தியடிகள் என்றாலே கைராட்டை தான் அனைவரின் நினைவுக்கு வரும், அதன் நினைவாக கைராட்டையும் வைக்கப் பட்டுள்ளது. கண்காட்சியினை பொது மக்கள் மிகவும் ஆர்வத்துடன் கண்டுகளித்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது
    • கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி நடந்தது

    கன்னியாகுமரி :

    முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி யின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகம் சார்பில் மாதந்தோறும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அவற்றுள் ஒன்றாக இந்த மாதம் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கலைஞரும் சங்கத்தமிழும் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது.

    இந்த போட்டியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 60-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    தமிழ் ஆசிரியர் சிவதாணு, ஆசிரியை குறமகள் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். போட்டியில் மாணவர் அண்ணாமலை, மாணவிகள் சுப்பிரஜா, ஜியுபிளமிங், ஆஸ்லின் அபீஷ்மா, ஆன்றனி வித்யா ஆகியோர் வெற்றி யாளர்களாக அறிவிக்கப்பட்ட னர்.

    தொடர்ந்து பிற்பகலில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் "அமரர் கலைஞருக்கு சூட்டும் வெண்பா மலர் 100" என்ற நூல் வெளியீட்டு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கவிஞர் கவிமணி தாசன் நற்பணி இயக்கத்தின் செயலாளர் ஓவியர் வை.கோபாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார். கன்னியாகுமரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்தியவள்ளி தலைமை தாங்கினார். பன்னாட்டு தமிழ் உறவு மன்ற இளங்கோ நூலினை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார். கலைவாசல் அமைப்பின் தலைவர் குமரி எழிலன் நூல் ஆய்வுரை நிகழ்த்தினார்.

    நூலாசிரியர் கவிமணி தாசன் நற்பணி இயக்கத்தின் பொதுச்செயலாளர் புலவர் சிவதாணு ஏற்புரை ஆற்றி னார். அதைத்தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும் கலந்துகொண்ட மாணவர்களுக்கு சான்றி தழ்களும் வழங்கப்பட்டன.

    முடிவில் ஆசிரியை குறமகள் நன்றி கூறினார்.

    இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி அரசு அருங் காட்சியக பணியாளர்கள் செய்து இருந்தனர்.

    • அரசு அருங்காட்சியகத்தில் பழந்தமிழரின் பாரம்பரிய இசை
    • சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் உலக இசை தினத்தை முன்னிட்டு பழந்தமிழரின் பாரம்பரிய இசை கருவிகளின் புகைப்பட கண்காட்சி தொடங்கப் பட்டுள்ளது. மிக தொன்மையான செழித்த இசை பாரம்பரியம் இந்தியா வின் கலாச்சாரத்தில் ஆழ மாக வேரூன்றி உள்ளது. இசை இல்லாத விழாவோ, சடங்கோ ஒன்று கூட கிடையாது.

    வெவ்வேறு தனித்துவ மான பெயர், வடிவம், கட்டுமானம், நுட்பம் மற்றும் தரம் ஆகியவற்றை கொண்ட இசைக்கருவிகள் சுமார் 500-க்கும் மேல் சென்னை அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டு உள் ளன. இந்திய இசை கருவிகள் அடி இசைக் கருவிகள், காற்று இசைக் கருவிகள், நரம்பு இசைக் கருவிகள் என 3 வகையாக பிரிக்கப்ப டுகின்றன.

    இதில் நரம்பு இசைக் கருவிகளுக்கு நீண்ட பாரம்பரியமும் அதில் வகைகளும் உண்டு. மனித வரலாற்றில் அடி இசைக் கருவி ஆதியில் தோன்றிய முதல் இசைக்கருவிகள். அதன் பின் காற்று இசைக் கருவிகள் தோன்றின. கடைசி யில் நரம்பு இசைக்கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பயன்படுத்தப்படும் முறை வாரியாக இசைக் கருவிகள் நாட்டுப்புற இசைக்கருவிகள், போர் இசைக்கருவிகள், கோவில் இசை கருவிகள் மற்றும் செவ்வியல் இசைக் கருவிகள் என 4 வகையாக பிரிக்கப்படுகின்றன.

    செவ்வியல் இசை கர்நா டக இசை, ஹிந்துஸ்தானி இசை என 2 பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன. சுரக்காய், மூங்கில், பிரம்பு, பலாமரம், கட்டு மரங்கள் கருங்காலி, செம்மரம் மண் பாண்டம், கன்று செம்மரி, எருமை மற்றும் உடுப்பு தோல், வெள்ளி, வெண்கலம், பித்தளை, தாமிரம், இரும்பு ஆகியவை இசைக்கருவி களின் பல்வேறு பாகங்களை உருவாக்க பயன்படுத்தப்பட் டன. 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பழந்தமி ழர்களின் தொல் இசை கருவியான செங்கோட்டு யாழ், எருது யாழ், விற்குடி யாழ், மயில் யாழ் போன்ற பல்வேறு இசை கருவிகளின் புகைப்படங்களை இக்கண் காட்சியில் காணலாம்.

    நேற்று தொடங்கப்பட்ட இந்த கண்காட்சியினை மாணவ, மாணவிகள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். கண்காட்சி ஜூலை மாத இறுதி வரை காட்சிப் படுத்தப்பட்டிருக்கும் என்று கன்னியாகுமரி அரசு அருங்காட்சியக காப்பாட்சி யர் (கூடுதல் பொறுப்பு) சத்திய வள்ளி தெரிவித்து உள்ளார்.

    • அமராவதி ஆற்றங்கரையில் புராதான கோவில்களும், கல்வெ ட்டுகளும் அதிகளவில் உள்ளன.
    • உடுமலை நகராட்சி அலுவலக கட்டடம் 1941ல் கட்டி முடிக்கப்பட்டு தாகூர் மளிகை என்ற பெயரில் பயன்பாட்டுக்கு வந்தது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நொய்யல், அமராவதி என ஆற்றங்கரை நாகரீகம் முற்காலத்தில் செழித்திருந்தது. அமராவதி ஆற்றங்கரையில் புராதான கோவில்களும், கல்வெ ட்டுகளும் அதிகளவில் உள்ளன.மேலும், வரலாற்று சிறப்பு மிக்க நெடுகல், நடுகல், கல்வெட்டுகள் ஏராளம் இப்பகுதியில் உள்ளன. இவற்றில் பெரும்பாலான வரலாற்று சின்னங்கள் போதிய பராமரிப்பின்றி பாழாகி வருகிறது.முக்கியத்துவம் தெரியாமல் பழங்கால சிலைகள், கல்திட்டைகள், கல்வெட்டுகள் அழிக்கப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளது.

    உடுமலை, மடத்துக்குளம் பகுதியில் உள்ள பெருங்கற்கால சின்னங்கள், சுதந்திர போராட்ட வரலாறு குறித்து இளைய தலைமுறையினரும் தெரிந்து கொள்ளும் வகையில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.குறிப்பாக திருப்பூர் மாவட்டம் 2009ல் உருவாக்கப்பட்ட போது தொல்லியல்துறை சார்பில், அருங்காட்சியகம் ஏற்படுத்தி பழங்கால பொருட்களை காட்சிப்படுத்த வேண்டும்.மாவட்டத்தின் தொன்மையான வரலாறு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வலியுறுத்த ப்பட்டது. ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    உடுமலை நகராட்சி அலுவலக கட்டடம் 1941ல் கட்டி முடிக்கப்பட்டு தாகூர் மளிகை என்ற பெயரில் பயன்பாட்டுக்கு வந்தது. நகராட்சிக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டதும் பழைய கட்டடம் பயன்பாடு இல்லாமல் இருந்தது.முழுவதும் கற்களால் கட்டப்பட்டு பொலிவு மாறாமல் இருக்கும் கட்டடத்தில், அருங்காட்சியகம் அமைக்க கோரிக்கை எழுந்தது.

    இதையடுத்து நகராட்சி சார்பில் தாகூர் மளிகையில், அருங்காட்சியகம் ஏற்படுத்தி உடுமலை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட தொன்மையான பொருட்கள் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.சுதந்திர போராட்ட வரலாறு குறித்த தகவல் பலகைகளும் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    எனவே திருப்பூர் மாவட்ட நிர்வாகமும், உடுமலை நகராட்சியும், அருங்காட்சியகம் அமைப்ப தற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்
    • தமிழ்நாட்டில் உள்ள உலக பாரம்பரிய தளங்களின் புகைப்பட கண்காட்சி தொடங்கப்பட்டது.

    கன்னியாகுமரி :

    உலக பாரம்பரிய நாள் நினைவு சின்னங்கள் மற்றும் தளங்களுக்கான உலக நாள் என்றும் அழைக்கப்படுகிறது. இது கலாச்சார பாரம் பரியத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவம் மற்றும் உலக பாரம்பரியத்தின் பன்முகத்தன்மையை கொண்டாடுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18 -ந்தேதி கொண்டாடப்படுகிறது.

    உலக பாரம்பரிய நாளின் முக்கிய நோக்கம், வரலாற்று கட்டிடங்கள், நினைவு சின்னங்கள் மற்றும் தொல் பொருள் தளங்கள் போன்ற கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிப்பதாகும்.

    அந்நாளை முன்னிட்டு நேற்று கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட தமிழ்நாட்டில் உள்ள உலக பாரம்பரிய தளங்களின் புகைப்பட கண்காட்சி தொடங்கப்பட்டது.

    யுனெஸ்கோ என்று அழைக்கப்படும் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு என்பது நமது வளமிக்க கலாச்சார மற்றும் வரலாற்று வம்சாவளியை பாதுகாக்கும் மற்றும் உலகம் முழுவதும் அமைதியை பரப்பும் ஒரு அமைப்பாகும். இந்த சிறப்பு அமைப்பு உலகெங்கிலும் உள்ள மிகவும் மதிப்புமிக்க மனிதனால் உருவாக்கப்பட்ட புதையல்களை பாதுகாப்பதில் மகத்தான நடவடிக்கைகளை எடுக்கிறது.

    இந்தியாவில் யுனெஸ்கோ 30 உலக பாரம்பரிய தளங்களை பட்டிய லிட்டுள்ளது. அதில் நான்கு தமிழ்நாட்டை சேர்ந்தவை. அவை தஞ்சாவூரில் உள்ள பிரிஹதீஸ்வரர் கோவில், தாராசுரத்தில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவில், ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஷ்வரர் கோவில், மகாபலிபுரத்தில் உள்ள நினைவு சின்னங்களின் குழு, நீலகிரி மலை ரெயில்வே ஆகியவற்றின் புகைப்படங்கள் மற்றும் அவற்றப்பற்றிய விளக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.

    இந்த கண்காட்சியினை ஏற்பாடு செய்த கன்னியாகுமரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்திய வள்ளி கூறுகையில், நம் முன்னோர்கள் விட்டு சென்ற பொருட்களும், இடங்களும் தான் நம் பாரம்பரிய சொத்துக்கள்.

    அவற்றை நாம் பத்திரமாக பேணி பாதுகாக்க வேண்டும் என்கிற உணர்வினை இன்றைய தலைமுறை யினருக்கு தெரிவிப்பதே இந்த கண்காட்சியின் நோக்கம் என்றார்.

    இந்த கண்காட்சியினை இருளப்பபுரம் செப்பீல்டு இனோவெட்டிவ் சி.பி.எஸ்.சி.பள்ளி மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். மேலும் மாணவர்களுக்கு அருங்காட்சியகம் முழுவதும் சுற்றி காட்டப்பட்டு வரலாற்று சின்னங்களை பாதுகாப்பதில் முக்கியத்துவங்கள் எடுத் துரைக்கப்பட்டன. இன்று தொடங்கப்பட்டுள்ள இந்த கண்காட்சி ஏப்ரல் மாதம் முழுமையும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் என்று கன்னியாகுமரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி தெரிவித்துள்ளார்.

    ×